இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக தனியார் மற்றும் பாடசாலை பஸ்கள் உட்பட பல துறைகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் புதிய முறையொன்று பின்பற்றப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
போதியளவு எரிபொருள் விநியோகம் உள்ளதால் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளை திறக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்தில் பயணிக்க முடியாத பெரும்பாலான மக்கள் புகையிரதத்தினூடாக தமது போக்குவரத்துத் தேவைகளை பூர்த்திசெய்துள்ளனர். ஆனால் தற்போது ரயில் சாரதிகள் தங்களது அன்றாட பணிகளுக்கு செல்ல எரிபொருள் பற்றாக்குறையால் ரயில் பயணத்தை ரத்து செய்ய நேரிடும் என்று கூறுகின்றனர்.