இன்று காலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரத்திலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநுராதபுரம், பண்டுலகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் இது இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த நபர் பல நாட்களாக எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொண்டதாகவும், அண்மைய வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சுகாதார பிரிவினருக்கும் ஏனைய வாகனங்களுக்கும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை களுபோவில வைத்தியசாலைக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதன்படி கொஹுவல சந்தியில் இருந்து களுபோவில சந்தி வரையிலான ஒரு பாதை மூடப்பட்டது.