வெலிகந்தவில் போதைக்கு அடிமையானவர்களுக்காக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500-600 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு தடுப்பு முகாமில் இருந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னர் முகாமுக்குள் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றியிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கைதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும்,
இதனைத்தொடர்ந்து இன்று காலை சுமார் 500 தொடக்கம் 600 கைதிகள் பாதுகாப்பு வேலிகளினை உடைத்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இவ்வாறு தப்பியோடியவர்களினை கண்டுபிடிப்பதற்காக விசேட நடவடிக்கைளினையும் ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.