பிறைக் குழுக்களின் அறிக்கையின் இன்று (30) திகதி வியாழக்கிழமை துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அவ்வகையில், 2022 ஜூலை 01 ஆம் திகதி ஹிஜ்ரி 1443 துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை ஜூலை 10ஆம் திகதி கொண்டாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.