22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
19 ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களை நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தின் நல்ல பண்புகளை இணைத்து 22 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.