60 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கும், இதுவரை கொவிட் தடுப்பூசி எடுக்காத கைதிகளுக்கும், மூன்றாவது டோஸ் பெற்ற சிறை அதிகாரிகளுக்கும் நாட்டின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நான்காவது கொரோன வைரஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 30 சிறைச்சாலை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு நான்காவது ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும்.
இதன் ஆரம்பமாக சிறைச்சாலை தலைமையகம், வெலிக்கடை, மகசீன் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் பணிபுரியும் கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நான்காவது தடுப்பூசி போடப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.