பணம் செலுத்தப்பட்ட கப்பலின் டீசல் கையிருப்பு இன்று இறக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான கொடுப்பனவுகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வருடத்திற்கான விமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் முதலாவது எரிபொருள் இருப்பு கொண்ட கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதி மற்றும் 14ஆம் திகதிக்கு இடையில் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல் கப்பலுக்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, QR அமைப்பின் ஊடாக எரிபொருள் வெளியிடப்படுவதால் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களை சுற்றி நீண்ட வரிசையில் நிற்கவில்லை என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
QR முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 52,74,800 ஆக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மாத்தறை பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்குமாறு வற்புறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குரு டிவி செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மீகொட, லியான்வல பகுதியில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்ய தயாராக இருந்த பௌசர் சாரதி உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பௌசர் சாரதி அதிக விலைக்கு எரிபொருளை விற்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு முன்னதாக தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சுற்றிவளைப்பில் தலா ஒரு டீசல் லீற்றர் 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கு தந்திரமான தூதுவர் மூலம் தயாராக இருந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பௌசரில் இருந்த டீசல் அளவு 6,600 லீற்றர். ஆகும் பௌசர் சாரதியை தவிர ஒருவரும் தரகர்கள் இருவருமே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பவுசரில் கண்டெடுக்கப்பட்டது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான டீசல் கையிருப்பு என விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களை இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.