சிறையில் கைத்தொலைபேசி பயன்படுத்திய குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தாணிஸ் அலிக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27.07.2022 அன்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தாணிஸ் அலி என்ற குறித்த சந்தேகநபர், சிறைச்சாலையில் சிறைச்சாலை விதிகளின்படி சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட பொருளான கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதனை விசாரித்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு, ஊடகப் பேச்சாளர்) சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.