தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 33,000 கிலோ பூண்டு அடங்கிய கொள்கலனில் இருந்து பூண்டை திருடி விற்பனைக்கு தயார் செய்த சந்தேக நபர்கள் இருவர் ராகம, பேரலந்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.
குறித்த பூண்டுகளை கொள்வனவு செய்ய வந்த மூவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 777 கிலோ கிராம் பூண்டு மற்றும் 02 லொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22, 28, 44 மற்றும் 50 வயதுக்குட்பட்ட கும்புக்வெவ, தெஹியோவிட்ட மற்றும் ராகம பிரதேசங்களில் வசிக்கும் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.