இத்தருணத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது என ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய இத்தேபானே தம்மாலங்கார நா தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மகாசங்கத்தினருக்கு விஜயம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட போதே அதி வணக்கத்துக்குரிய இத்தீபானே தம்மாலங்கார நா தேரர் இதனைக் குறிப்பிட்டார்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொட்டாவ ருக்மலே தர்ம விஜயலோக விகாரைக்கு சென்று புனித இத்தேபனே தம்மாலங்கார நா தேரரை தரிசித்தார்.