அரசியல் கட்சி பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல விடயங்களுக்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, கட்சி பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.