புதிய கூட்டணியின் கீழ் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்றத்தில் உள்ள பத்து சுயேச்சைக் கட்சிகளும் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி தனது புதிய கூட்டணியின் பெயரை வெளியிடவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டாக நாட்டைக் கட்டியெழுப்புவதை விடுத்து, தலைவர்கள் இன்னமும் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வருவதாக பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இவ்வாறு தெரிவித்தார்.