205 மில்லியன் பெறுமதியான 0.9 கிலோ 500 கிராம் எடையுள்ள பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற விமானப் பயணி மற்றும் விமான நிலையத்தின் கடமையில்லா வர்த்தக வளாகத்தின் ஊழியர் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று கைது செய்துள்ளது.
நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய பயணி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று காலை 08.35 மணியளவில் Emirates Airlines விமானமான EK-650 இல் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட மற்றைய நபர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள கடமையில்லா வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் சீதுவையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஆவார்.
இந்த விமானப் பயணியும், பணிப்பெண்ணும் தனது கைப் பையில் வைத்திருந்த 116.6 கிராம் எடையுள்ள 80 தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.