சரியான முறையில் கையாளப்படாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி சுயேச்சைக் கட்சிகளின் புதிய கூட்டணி தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக இலங்கைக்கு வந்து நாட்டில் பாதுகாப்பாக வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சுயேச்சைக் கட்சிகளின் புதிய கூட்டணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய கூட்டணி செப்டம்பர் 4-ம் திகதி
வெளியிடப்பட உள்ளது.