எதிர்வரும் சவால்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மக்கள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.