தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மற்றுமொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமிந்த கலும்பிரிய அமரசிங்க என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருதுவத்தை பொலிஸில் சரணடைந்த பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த குற்றச்சாட்டில் தனிஷ் அலி என்ற நபரும் முன்பு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.