மானியங்களை வழங்குவதன் மூலம் மின்சார சபையை மேலும் வீழ்ச்சியடைய அனுமதிக்க முடியாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விகாரைகளின் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் தமக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.