தற்போது வழங்கப்படுகின்ற சம்பளமானது வாழ்க்கைச் செலவுக்கே போதாது எனவே ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை உயர்த்துமாறு கோரி ஆசிரியர் அதிபர் கூட்டணி இன்று (20) சம்பள ஆணைக்குழுவினை நாடியுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பினுடைய பிரதிநிதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலின், தற்போது வழங்கப்படும் சம்பளம் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு போதாது என்றும் அதனை அதிகரிக்க்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.