உலகின் பல நாடுகளில் உள்ளதைப் போன்று இலங்கையிலும் ஏற்கனவே துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டர்களாக பெண்கள் பணியாற்றி வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பலரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
துறைமுகம், கடல்சார் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் மூன்றாவது உறுப்பினர் தொடர்பில் நேற்று (20) இடம்பெற்ற முதலாவது சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தரவையும் இந்தக் குழு ஒப்புக்கொண்டுள்ளது.