பாப்பரசரின் விசேட அழைப்பின் பேரில், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் 56 பேர் கொண்ட குழு இன்று (22) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) இரண்டு விமானங்களில் ரோம் நோக்கிச் சென்றுள்ளனர்.
இன்று (22) காலை 05.02 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானமான QR-659 இல் கொழும்பு பேராயர் உட்பட 8 ஆயர்கள் தோஹா நோக்கி புறப்பட்டனர். பின்னர் அந்த குழு தோஹாவிலிருந்து ரோம் நகருக்கு மற்றொரு விமானத்தில் புறப்படும்.
மற்றைய குழுவில் 18 பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் பலியான 4 பேரும், கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் 6 பேரும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் 20 பேரும் அடங்குவர்.
இக்குழுவினர் இன்று (22) காலை 10.05 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் EK-651 இல் துபாய் நோக்கி புறப்பட்டுள்ளனர். பின்னர் குழு மற்றொரு விமானத்தில் ரோம் செல்லும்.