அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இவ்வாறு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தற்போது அரச ஊழியர்கள் பணிக்கு செல்வதற்கும் திரும்புவதற்கும் பாரிய மேலதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரச உத்தியோகத்தர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால் அவர்களுக்கு அரச நிர்வாக அமைச்சின் உதவிகள் மற்றும் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படும் என்றார்.