எந்தவொரு ராஜபக்சவும் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஷேந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில், பதவி விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
மற்றுமொரு ராஜபக்ச ராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.பி.சஷேந்திர ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.