நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் பாடசாலைகளின் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், மாணவர்கள் இதில் பல வழிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் பாடசாலைகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பாடசாலைகள் தொடர்பிலும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
ஆரம்ப தரத்தில் மாணவர்கள் இழந்த கல்வியை எதிர்காலத்தில் மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.