பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று காலை ஆரம்பமானது.
அது பிரதமர் அலுவலகத்தில். இந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் பத்து பிரதிநிதிகள் கலந்துகொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் குறித்த நேரத்துக்கு கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியவில்லை. கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.