வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்வது தொடர்பில் நீதிமன்றத்தினால் தீர்மானம் எடுக்கப்படும் வரை தாம் பாராளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்ய மாட்டார் என அவரது சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மனுக்கள் மீதான பரிசீலனையின் முடிவில் தம்மிக்க பெரேரா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
இதையடுத்து மனுக்கள் மீதான அடுத்தக்கட்ட விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.