கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக விசேட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு கொழும்பு 5 பாதையை பொலிஸார் மூடி வைத்துள்ளனர்.
எவ்வாறாயினும், வீதி மூடப்பட்ட பிரதேசத்திலேயே போராட்டக்காரர்கள் தங்கியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.