மறு அறிவித்தல் வரை, பொது நிர்வாக அமைச்சு பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அத்தியாவசிய மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கூட்டுவதற்கு அதிகாரம் வழங்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்கு இடையூறாக இருக்கக்கூடாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.