இரண்டு அரசாங்க அமைச்சர்கள் நாளை ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த விஜயத்தின் போது ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.