அநுராதபுரம் யாழ்ப்பாணம் சந்தி பகுதியில் வீடொன்றின் குப்பி விளக்கு கவிழ்ந்து தீப்பிடித்துள்ளது.
வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சமையல் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் சேமிப்பு காலன்மேல் குப்பி விளக்கு விழுந்ததில் குறித்த தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.