முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் இதுவரை தமது உத்தியோகபூர்வ வாகனங்களை திருப்பிக் கொடுக்கவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு உரிய அமைச்சுக்களால் பணிப்புரை விடுக்கப்பட்ட போதிலும் பலரிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க வாகனங்களை ஒப்படைக்காவிட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்ய அமைச்சுக்களின் செயலாளர்கள் சிலர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.