G7 உச்சிமாநாட்டில் இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 20 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் மிகவும் தேவைப்படும் இலங்கையர்களுக்காக இந்த புதிய நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 15 மாதங்களில் 800,000 க்கும் மேற்பட்ட இலங்கை குழந்தைகளுக்கான பள்ளி போஷாக்கு திட்டங்களையும் 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உணவு வவுச்சர்களையும் வழங்குவதே இதன் நோக்கமாகும்.
பாதிக்கப்படக்கூடிய இலங்கை மக்களின் உணவு உற்பத்தியை அதிகரிக்க விவசாய உதவிகள் மற்றும் நிதி உதவிகள் மூலம் சுமார் 30,000 விவசாயிகளுக்கு உதவவும் திட்டமிடப்பட்டுள்ளது.