அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிவாயு விலையை விட எதிர்காலத்தில் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்டோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் எரிவாயு விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார் .
“இப்போது குறைக்கப்பட்ட விலையை சரியாக ரூபாயில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுக்கு ஒரு குறிப்பு கொடுக்கிறேன். சமீபத்தில் உயர்த்தப்பட்ட விலையை விட விலை குறையும். 50 உயர்த்தினோம். ஆனால், நிச்சயமாக அதைவிட அதிகமாகக் குறைக்கப்படும்” என்று தெரிவித்தார்.