“சீனாவினுடைய ” கொள்கை மற்றும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் ஐக்கிய நாடுகளின் சாசனக் கோட்பாடுகளுக்கு இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பை வாங்குவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் Xi Shanghong உடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அமெரிக்காவினுடைய சபாநாயகரின் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய உலகளாவிய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பரஸ்பர மரியாதை மற்றும் உள்விவகாரங்களில் தலையிடாமை என்பன அமைதியான ஒத்துழைப்பிற்கும் அத்துடன் மோதல்களைத் தவிர்ப்பதற்கும் முக்கியமான அடிப்படையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனத் தூதுவர் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.