தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு முழுநேர நிதி அமைச்சர் தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சகத்தை வேறொரு அமைச்சரிடம் ஒப்படைக்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசாங்கமோ அல்லது புதிய அரசாங்கமோ இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் பொருளாதார நெருக்கடியை இரண்டு வருடங்களுக்குள் திட்டமிட்டுத் தீர்க்க முடியும் என சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்தார்.