கொவிட் தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை-கொழும்பு இரவு நேர அஞ்சல் புகையிரதம் இன்று (07) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக திருகோணமலை-கொழும்பு புகையிரதம் காலோயா வரை மட்டுப்படுத்தப்பட்டது.இதனால் திருகோணமலையில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பில் இருந்து வரும் இரவு அஞ்சல் ரயிலுக்கு மாற்ற வேண்டியிருந்தது.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ரயிலை இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
புதிய ரயிலில் 11 பெட்டிகள் மற்றும் இரண்டு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2ம் வகுப்பு மற்றும் 1ம் வகுப்பு பயணிகளின் வசதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர மூன்றாம் வகுப்பு இருக்கைகளையும் முன்பதிவு செய்யலாம்.
இலங்கை ரயில்வேயின் பழமையான ரயில் சேவைகளில் ஒன்றான திருகோணமலை – கொழும்பு இரவு அஞ்சல் ரயில் திருகோணமலை மக்களின் மிகவும் வசதியான மற்றும் பிரபலமான பயணச் சேவையாகும்.