ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கெல்லிக் பிரேசர் என்ற பெண், தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். காலி முகத்திடல் கோத்தா கோ கிராம போராட்டத்தில் தான் ஈடுபட்ட்தாகவும் இதன்காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனக்கு வழங்கப்பட்ட விசாவை தன்னிச்சையாக ரத்து செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட இத்தீர்மானம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவித்து நியாயமான அடிப்படையின்றி செல்லுபடியற்ற ஆணை என அறிவிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.