ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று நிராகரித்துள்ளார்.
இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் 07 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை தொடர்பிலானது.
அந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட போது, அவரது வெளிநாட்டு பயணத்துக்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, இன்று நீதிமன்றில் பிரேரணை மூலம் ஆஜராகிய உதயங்க வீரதுங்கவின் சட்டத்தரணி, வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமது கட்சிக்காரர் வெளிநாடு செல்லவுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அந்தக் கோரிக்கைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.