முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ச,கிட்டத்தட்ட 28 நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த பின்னர் நேற்று தாய்லாந்து வந்தடைந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மேலும் மூவருடன் தனி விமானத்தில் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து வந்ததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி தற்போது பாங்கொக்கில் உள்ள வெளிவராத ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதோடு, அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் விசேட பணியகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்திற்கு முதலில் வரவிருந்த நிலையில், அவர் குறித்த தகவல்கள் கசிந்துள்ளதா என்ற சந்தேகம் காரணமாக விமானம் பாங்காக்கிற்கு திருப்பி விடப்பட்டது.