தொழிற்சங்கங்களின் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாது பெற்றோலியம் மற்றும் மின்சாரசபைகளை மறுசீரமைப்பதற்கான தேவையான பணிகள் தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில், மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து தொழிற்சங்கங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.