பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் தற்போது தங்காலையில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்குட்பட்ட தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.