இலங்கையில் கல்நார் பாவனை தொடர்பான நான்கு ஆய்வுகளின் அறிக்கை இன்று 24 திறன் அபிவிருத்தி தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றதுடன் குறித்த ஆராச்சிக்கு ரஷ்ய குடியரசு நிதியுதவி வழங்கியிருந்தது.
கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய அடிப்படை கல்வி நிறுவனம் இணைந்து இவ்ஆய்வுகளை நடத்தியிருந்தமை குறிப்பிடவேண்டிய விடையமாகும்.
இவ் ஆய்வுகளின் இறுதி நான்கு அறிக்கைகளுக்கு மேலதிகமாக, ரஷ்ய மற்றும் இலங்கை பிரதிநிதிகள் தயாரித்துள்ள நடவடிக்கையின் இறுதி அறிக்கையினை இந்நிகழ்வின் இறுதியில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளிக்கப்பட்டது.