நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அதன்படி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக 26 நிவாரணக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
காலி, தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 09 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தேவைக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பில் நிவாரணக் குழுக்கள் வைக்கப்பட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.