அமெரிக்கா இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கனுக்கும் சீனா வெளிவிவகார அமைச்சர் வாங் யீக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வலுத்துள்ள பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும். மேலும், பலூன் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் சர்ச்சைக்குரிய சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பில் சீனாவுக்கு அமெரிக்கா இராஜாங்க செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உளவு பார்க்க பயன்படுத்தப்படும் பலூன் மூலம் அமெரிக்க வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததற்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பு மற்றும் கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சீனா வெளிவிவகார அமைச்சு எவ்வித தகவலையும் வழங்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.