
சென் ஜூடி துணை மருத்துவக் கல்லூரியின் வருடாந்த தேசிய தொழில் தகைமை வழங்கும் விழா சனிக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் சிறந்த மனிதாபிமான செயற்பாட்டாளர் விருதினை கல்முனை முஅத்தீன் A.L.ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கு கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சப்றாஸ் மன்சூர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கல்லூரியின் போசகருமான எம்.ஏ.நவாஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கல்முனை முஅத்தினார் ஷாஹுல் ஹமீத் அவர்களை வாழ்த்தி கௌரவித்தார்கள்.