கொழும்பு-கண்டிவர வீதியின் மாவனெல்ல பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.