மரக்கறி, தென்னை, தேயிலை மற்றும் இலவங்கப்பட்டை தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் கலப்பு உரங்களின் விலை 50 சதவீதத்தால் குறைந்துள்ளது.
மேலும், வர்த்தக உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா இன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இதனைத் தெரிவித்ததாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உரக் கம்பனி இணைந்து தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் கலப்பு உரங்களின் விலையை விட குறைந்த விலையில் உயர் தரம் கொண்ட பல புதிய கலப்பு உரங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.