நாட்டிற்குள் பீடி கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 490 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நேற்று (16) இரவு சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வகையில் கரையை வந்தடைந்த படகு ஒன்றை பரிசோதித்த போது குறித்த கப்பலில் 16 சாக்கு மூட்டைகளில் பீடி இலைகள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், படகுடன் இரண்டு சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 29 மற்றும் 42 வயதுடைய மன்னார் பேசாலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவார்கள்.