கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சத்தியப்பிரமாணம் செய்ய கோப் குழு தீர்மானித்துள்ளது.
பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோவை எதிர்வரும் 23ஆம் திகதி கோப் குழுவிற்கு மீள அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.