எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அரிசி மற்றும் உணவுப் பொருட்களின் பொதி ஒன்றின் விலையை 10 வீதத்தால் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன் தலைவர் அசேல சம்பத் கூறுகையில், சமையல் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒரு பொதி அரிசி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் இன்று பிற்பகல் முதல் அரிசி பொதி ஒன்றின் விலையை அதிகரிப்பது நியாயமானதா என நெத் நியூஸ் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்திடம் வினவப்பட்டது. உணவக உரிமையாளர்களுக்கு அரசாங்கம் ஓரளவு நிவாரணம் வழங்கினால் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.