தென் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தண்டப்பணம் அறவிடப்படாமல் எதிர்வரும் 30ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் 29ஆம் திகதி வரை காலாவதியாகும் வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு கால அவகாசம் வழங்க தென் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விநியோக தடைகள் காரணமாக உத்தியோக கடமைகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஜூலை 29 ஆம் திகதி வரை அபராதம் விதிக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.